என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பையில் 39 ரன்னில் ஆல் அவுட் ஆன 2-வது அணி.. மோசமான சாதனை படைத்த உகாண்டா
- உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கயானா:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார். ரசல் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். உகாண்டா தரப்பில் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களம் இறங்கிய உகாண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் உகாண்டா அணி இந்த ஆட்டத்தில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற நெதர்லாந்தின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.
டி20 உலககோப்பை தொடரில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி:-
39 ரன் - நெதர்லாந்து - இலங்கை - 2014
39 ரன் - உகாண்டா - வெஸ்ட் இண்டீஸ் - 2024
44 ரன் - நெதர்லாந்து - இலங்கை - 2021
55 ரன் - வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து - 2021
58 ரன் - உகாண்டா - ஆப்கானிஸ்தான் - 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்