search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான், விராட் கோலி உள்ளிட்டோர் பந்து வீசியது ஏன் தெரியுமா... ரோகித் சர்மா விளக்கம்
    X

    நான், விராட் கோலி உள்ளிட்டோர் பந்து வீசியது ஏன் தெரியுமா... ரோகித் சர்மா விளக்கம்

    • ஹர்திக் பாண்ட்யா காயத்தால் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்துகிறது.
    • நெதர்லாந்துக்கு எதிராக 9 பேர் பந்து வீசினர். விராட் கோலி, ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    இந்திய அணி பும்ரா, சிராஜ், முகமது சமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா காயத்தால் வெளியேறியதால் 6-வது பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடி வருகிறது. ஒருவேளை இந்த ஐந்து பேர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று பந்து வீச்சாளருக்கு என்ன செய்யும்? என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அடிக்கடி முன்வைப்பது உண்டு.

    பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுக்கு மேல் பயன்படுத்தும் அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இல்லை. ஆனால், நெதர்லாந்துக்கு எதிராக விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் பந்து வீசினர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.

    எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இதுதொடர்பாக கூறுகையில் ''இது போன்ற சில விசயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது. இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விசயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்க்கர்கள் வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்'' என்றார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா சுமார் ஏழு வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×