search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அனைத்து முயற்சிகளும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை: ரோகித் சர்மா
    X

    அனைத்து முயற்சிகளும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை: ரோகித் சர்மா

    • 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.
    • டிராவிஸ் ஹெட்- லபுஷேன் ஜோடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பி விட்டார்கள்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டி முடிவடைந்து பரிசு வழங்கும் நிகழ்வின்போது, ரோகித் சர்மா கூறியதாவது:-

    முடிவு நாங்கள் நினைத்த வழியில் இல்லாமல் போனது. இன்று எங்களுக்கு சிறந்ததாக இல்லை. நாங்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்தோம். ஆனால், அவை எங்களுக்கு உதவாமல் போய்விட்டது. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், அது சிறந்தாக இருந்திருக்கும். விராட் கோலி- கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியபோது, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

    240 ரன்கள்தான் அடித்திருக்கும்போது, விக்கெட்டை வீழ்த்தி விரும்ப வேண்டும். ஆனால் டிராவிஸ் ஹெட், லபுஷேன் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை எங்களிடம் இருந்து முற்றிலுமாக அவர்களுக்குரியதாக்கி விட்டனர்.

    சேஸிங் செய்தபோது, ஆடுகள் பேட்ஸ்மேன்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்தது. நான் எந்தவித சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அதிக ரன்கள் அடிக்கவில்லை. 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினோம். இன்னும் வீழ்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த இருவரும் சிறப்பாக விளையாடினர்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    Next Story
    ×