என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அரை சதம் விளாசிய சுப்மன் கில்- ஜிம்பாப்வேக்கு 183 ரன்கள் இலக்கு
- இந்தியா தரப்பில் சுப்மன் கில் 66 ரன்கள் குவித்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஹராரே:
இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடி ஜெய்ஸ்வால் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து சுப்மன் கில் - ருதுராஜ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் 49 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்