search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அரை சதம் விளாசிய சுப்மன் கில்- ஜிம்பாப்வேக்கு 183 ரன்கள் இலக்கு
    X

    அரை சதம் விளாசிய சுப்மன் கில்- ஜிம்பாப்வேக்கு 183 ரன்கள் இலக்கு

    • இந்தியா தரப்பில் சுப்மன் கில் 66 ரன்கள் குவித்தார்.
    • ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஹராரே:

    இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடி ஜெய்ஸ்வால் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து சுப்மன் கில் - ருதுராஜ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×