search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.
    • திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம்.

    கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.

    கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர்.

    சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது.

    நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

    சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.

    திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம்.

    அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோவில் உள்ளது.

    இப்பகுதி 'நால்வர் கோவில்பேட்டை' என்று வழங்குகிறது.

    கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.

    தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது.

    7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது.

    இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

    • அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
    • அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

    ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது.

    நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது.

    அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

    அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது.

    அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

    பைரவர் வாகனமின்றி உள்ளார்.

    • இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.
    • ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது.

    கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில்,

    (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.

    இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.

    ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம்.

    இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது.

    நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார்.

    உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

    இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது), இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம் பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோவில்களாக அமைந்துள்ளன.

    ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

    உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

    • உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.
    • கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    சங்கு தீர்த்தம் பெரிய குளம்.

    நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

    இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது.

    குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோவில் விமானம் தெரிகின்றது.

    மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன்-ருத்ரகோடீஸ்வரர், இறைவி-அபிராமசுந்தரி,

    இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோவில்' என்றழைக்கின்றனர்.

    தாழக்கோவில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது.

    உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.

    கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது.

    இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

    இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

    • கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.
    • கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

    இறைவி - திரிபுரசுந்தரி.

    தலமரம் - வாழை.

    தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

    மிகப் பழமையான கோவில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன.

    கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.

    கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது.

    இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க, இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    • உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.
    • எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    எல்லா ஜீவராசிகளுக்கும் உதடுகள் வெளியே தெரியும்.

    யானைக்கு மட்டும் தான் தும்பிக்கை உதட்டை மூடியிருக்கிறது.

    உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.

    எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    மற்ற நேரங்களில் வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பது தான் உண்மையான ஞானியின் அடையாளமாகும்.

    இதைக் காட்டவே வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜமுக ரூபத்தில் விநாயகர் இருக்கிறார்.

    எல்லாவிதமான அறிவுக்கும் முடிவு மவுனம்தான். இது விநாயகர் முகம் உணர்த்தும் தத்துவம்

    • விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர்.
    • விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    * புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    * பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

    * ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

    * விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    * கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    * சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

    • நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.
    • விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும்.

    பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.

    விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.

    விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

    அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.

    • கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
    • நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

    கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

    விளக்கேற்றும் முகத்தின் பலன்

    குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்

    குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை

    குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்-புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி

    குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை

    குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

    • குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
    • வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும்.

    குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

    மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.

    வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும். 

    தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

    தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்

    பசு நெய்: செல்வம் பெருகும்

    நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்

    விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்

    இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்

    புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.

    மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

    • வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.
    • நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள்.

    பின்னர் அன்னதானம், சொர்னதானம் முதலிய 32 தானங்களும் அவரவர் விரும்பியபடி வேண்டும் அளவிற்கு கொடுத்து நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.

    அப்படி வளர்ந்த தங்களுடன் உள்ள முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கும் சமயம் தேவியாருக்கு பூர்வக்கியானம் வந்து தந்தையாரை நோக்கி அப்பா!

    வேதகிரியை வலம் வந்த பிறகு தான் யோசிக்க வேண்டும் எனக்கூற அங்குள்ள யாவரும் ஆம்! அப்படியே செய்வது தான் நலம் என்றார்கள்.

    உடனே வணிகர்கோன் "திருமலை சொக்கமாள் "என்னும் திருத்தேவியை அழைத்துக்கொண்டு "திருக்கழுகுன்றம்" என்னும் திவ்ய ஷேத்திரம் அடைந்து திவ்ய தீர்த்தமாகிய சங்குத்தீர்த்ததில் நீராடி வேதமலையை வலம் வரும் போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாகிய மலைக்கு வடக்கு திசையில் செல்லும் போது ஒருபாறை மீது வேதகிரி பெருமான் அமர்ந்து இருப்பது அம்மையாருக்கு மட்டும் தோன்ற அம்மையார் அடையும் இடம் வந்ததை உனர்ந்து பெருமானிடம் நெருங்கி பூமியைக் கிளறி நிற்க வேதகிரிபெருமான் தேவியை அழைத்துக் கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்; முன்னே சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையைக் கானாது திகைத்து மயங்கி முன்னும் பின்னுமாக ஓடி ஒடி தேடியும் கானமையால் ஓவெனக்! கதறிய வண்ணமாக "திருமலைச் சொக்கம்மாள்" என்று பலமுறை கூவியழைக்க மலை மீது ஏன்! ஏன்! என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறிப் பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னுமாக நிற்பதறிந்து ஓ வெனக் கதறிய வண்னம் மெய் சோர்ந்து அடியற்ற மரம் போல சுவாமி திருபாதத்தில் விழுந்து கதற பெருமான் ஏ அன்ப வருந்த வேண்டாம்.

    நின் அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்து வந்தாள். இனி உம்முடன் வர மாட்டாள். வேண்டிய வரம் கேள் தருவோம் என திருவாய் மலர்ந்தார்.

    • சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.
    • பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    செட்டியார், சுவாமி தங்களை அடைந்ததும் அகில உலக தேவியே மகளாகப் பெற்றும நான் அடைந்ததை காட்டிலும் வேறு பேறு எனக்கு என்ன வேண்டும்.

    ஆயினும் இவ்விடத்திலேயே உம்மை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்கட்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் "என்று அவரவர் கோரியபடி வரத்தையும் அளித்தருள வேண்டுமென பிரார்த்தித்தார்.

    சுவாமியோ! அப்படியே ஆகுக என்று திருவாய் மலர்ந்தார்.

    பிறகு மேல் சன்னிதானத்திற்கு வருக என்று கூறினார்.

    அக்கட்டளையை ஏற்று வேதமலை உச்சியில் சென்று பார்க்க,அங்கும் அம்மையாரோடு காட்சி அளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! வேதகிரி பெருமானே! அம்மயாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டும் என பிரார்த்திக்க, பெருமான் அம்மையார் சன்னிதானத்திலேயே இருக்க மோட்சமளித்தார்.

    வணிகர்கோன் விதேக முக்தி அடைந்தார். அவ்வம்மையாரை வளர்த்த தாயகிய மங்கையர்கரசியாருக்கும் பெருமான் சாயுச்சிய பதவியளித்தார்.

    அந்த நாள் முதல் ஈசன் வேதகிரி பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி வேதமலையின் மேல் வடக்கு திசையில் அம்மையாரால் ஏற்பட்ட வரமாதலால் அம்மையார் பேரே விளங்க "திருமலை சொக்கம்மன்"ஆலயம் என்றாக்கி இருவரும் அங்கெழுந்தருளியிருந்து மெய்யன்போடு தம்மை வந்து அடைந்த அன்பர்களுக்கு "புத்திரப்பேறு, மாங்கல்யப்பேறு, செல்வப்பேறு, பினிநீக்கம் போன்ற பேறுகள் கொடுக்கப்பெற்றவர்கள் தாமடைந்த வரத்தை முன்னிட்டு தொட்டில் பிள்ளை, மாலை சாத்துதல், அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்கின்றனர்.

    பெருமான் தேவியரை ஏற்றுக்கொண்ட சுப தினமான பங்குனி உத்திர சுபவேளையில் வருஷம் பிரதி வருஷம் சுவாமி, அம்மனுக்கு மஹா அபிஷேக திருக்கல்யான மஹோத்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    ×