search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் “சொக்கம்மாள்” என அசரீயாய் ஒலித்தது.

    மங்கயற்கரசி என்னும் திருநாமம் கொண்ட கற்புக்கரசியை பத்தினியாக உடைய தனக்கோட்டி செட்டியார் எனும் வணிகர் கோமான் அநேக தான தருமங்களைச் செய்தும் ஸ்தல தீர்த்த யாத்திரைகளை செய்தும் புத்திரபேரு இல்லாத குறையால் தானும் தன் பத்தினியாரும் மனக்கவலை அடைந்து வருந்தியிருந்தனர்.

    வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருவம் கொண்டு தமது இல்லம் வரக்கண்ட வணிகர் தன் பத்தினியோடு எதிர் கொண்டு அவரை அழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமர செய்தார்.

    வேதகிரி இங்கெழுந்தருளியது பல ஜென்மங்களில் செய்த தவ பயனே ஆகுமென்று வணங்கி சுவாமிகள் திருவடி கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்திட்டு நறு மலர்களால் அர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியேன் எங்கள் குறை தவிர்த்து ஆட்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க, பெருமான் மனம் இறங்கி நீவீர் மேற்கே அடுத்துள்ள வேதகிரியை ஒரு மண்டலம் விதிப்படி பிரதஷனம் செய்து வர புத்திர பேரு உண்டாகுமென திருவாய் மலர்ந்து மறைந்தார்.

    அவ்வண்ணமே வேதகிரியை இருவரும் வேத விதிப்படி ஒரு மண்டலம் பிரதஷனம் செய்து முடிவில் வேதகிரி பெருமானுக்கும், திருபுரசுந்தரியம்மைக்கும் விசேஷ அபிஷேக அலங்காரம் செய்து வைத்து அடியார்கட்கு அமுதூட்டி தமது இல்லம் சேர்ந்து துயில் எழுந்து பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம் பக்கத்தில் இருக்கக் கண்டு கறையில்லா ஆனந்தம் பொங்கி இரு கரங்களில் ஏந்தி உச்சி மோந்து மார்புற தழுவுங்காலை ஆனந்தம் பொங்க இரு தனங்களிலும் பால் சுரக்க அம்மைக்கு பால் குடுத்தனர்.

    அதன் பின் பல தான தருமங்களை செய்து திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பின்னர் அக்குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசிக்கும் நேரத்தில் "சொக்கம்மாள்" என அசரீயாய் ஒலித்தது.

    அப்பெயரை கேட்ட அனைவரும் பரமானந்தம் கொண்டனர்.

    திருமலையை வலம் வந்த காரணத்தினால் வந்த செல்வமாதலால் "திருமலைச் சொக்கம்மாள்" என்னும் திருநாமம் சூட்டி மூன்று முறை அழைத்தனர்.

    • தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.
    • அந்த காரணத்தினால் இது ‘தரும கோடித்தலம்’ என்று பெயர் பெற்றது.

    தேவர்களும், முனிவர்களும் தங்கள் தங்கள் குறைகளை இத்தலத்தில் தவம் இருந்து போக்கி கொண்டார்கள்.

    இத்தன்மையுள்ள வேதகிரியைச் சூழ்ந்துள்ள ஏழரைக்காத எல்லையிலும் செய்கின்ற பந்தமாகியபாதகங்கள் செய்தது எவ்வளவோ அவ்வளவில் பொருந்தும்.

    தருமமோ என்றால் ஒன்று செய்தாலும் அது கோடியாய் பெருகும்.

    அந்த காரணத்தினால் இது 'தரும கோடித்தலம்' என்று பெயர் பெற்றது.

    கங்காநதி நீங்காத சடை முடியையுடைய பரமசிவம் வீற்றிருந்து அருளும் காரணத்தால் 'சிவபுரம்' என்று சொல்லப்படுகிறது.

    ஒரு தடவை சொன்னா 100 கோடி தடவை சொன்ன மாதிரி!

    சிவபெருமான் திருவாலங்காட்டில் காளியினுடைய வாதாட்டத்தினைக் கெடுத்து, ஊர்த்துவ தாண்டவம் செய்து இந்த வேதகிரியில் வந்து இளைப்பாறினார்.

    உருத்திர கோடி என்று மகிழ்ச்சியுடன் ஒருதரம் சொன்னால் அது நூறு கோடி முறை ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியதற்கு ஒப்பாகும்.

    • வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.
    • தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

    திருக்கழுக்குன்றம் தலத்தில் மொத்தம் 12 தீர்த்தங்கள் உள்ளன.

    நகரின் கிழக்குத்திசையில் ஏழு தீர்த்தங்கள் இருக்கின்றன. தென்கிழக்கில் சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

    வடக்குத்திக்கில் வசிட்ட தீர்த்தம் என்று ஒன்றிருக்கிறது.

    தென்மேற்குத்திக்கில் மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம் என நான்கு தீர்ததங்கள் உள்ளன.

    மேற்குத்திக்கில் நந்தி, வருணன் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    வடமேற்கில் அகலிகை என்றொரு தீர்த்தம் உண்டு.

    இந்த மலையின் உச்சியில் நாங்களிருவரும் கண்டதாகிய சம்பாதித் தீர்த்தம் என்று எங்கள் பெயரால் ஒன்றிருக்கிறது.

    மன்னனே! இத்தீர்த்தங்களைப் பார்த்தாலும் அள்ளித் தெளித்துக் கொண்டாலும் கணப்பொழுது மூழ்கினாலும் அங்கே போய் கால்சறுக்கி விழுந்தாலும் பரந்த அத்தீர்த்தத்தில் ஒரு துளி தெளித்தாலும் அதில் பறந்து வருகின்ற காற்று மேலே பட்டாலும் பாதகங்கள் எல்லாம் நீங்கிப்போகும்.

    தேவர்கள் தொழத்தக்க இந்த தீர்த்தங்கள் தோறும் நீர் மோண்டு கொண்டு ஒரு அடி எடுத்து வைத்துச்செல்லுதல் ஒரு அசுவமேக யாகத்தை செய்ததாகும். விரதம் அனுஷ்ட்டிப்பவர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கி அனுஷ்ட்டித்தால் ஆனந்தமாகப் பலன் அளிக்கும்.

    • இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.
    • இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

    திருச்சந்நிதிக்கு எதிரே சிறிது தூரத்தில் சங்கு தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. இது பெரியகுளம்.

    இந்த தீர்த்தத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது.

    சங்கு பிறக்கும் காலத்தில் இதில் நீராடுதல் மிகவும் விசேடம்.

    இத்தீர்த்தத்தில் ஒரு மண்டலம் (40 நாட்கள்) நீராடி மலையை வலம் வந்தால் எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.

    ஆனால் பாதுகாப்பு கருதி தற்போது யாரையும் நீராட குளத்துக்குள் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.

    இறையருள் மணக்கும் திருமுறைகளுள் இத்தலத்தை போற்றி திருஞானசம்பந்தர் ஒரு திருப்பதிகமும்,

    திருநாவுக்கரசர் ஒரு திருப்பதிகமும் சுந்தரர் ஒரு திருப்பதிகமும், சுந்தரர் ஒரு திருப்பதிகமும், மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றப் பதிகமும் அருளிச் செய்துள்ளனர்.

    • அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது.
    • உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.

    அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது.

    உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள்.

    அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீஸ்வரர் சந்நிதி உள்ளது. அதையடுத்து நடராச சபை உள்ளது.

    பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று, உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும், அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

    பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார்.

    கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார்.

    உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

    • 4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
    • வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

    தாழக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது.

    இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே ராஜகோபுரம்.

    ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது.

    இக்கோகுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது.

    அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.

    இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன.

    4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.

    வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

    2-வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது.

    இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை.

    இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன.

    ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது.

    • இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
    • கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.

    வேதகிரீசுவரர் குடைவரை கோவிலை வணங்கி கொண்டு இறங்கி ஊருக்குள் சென்றால் தாழக்கோவிலை அடையலாம்.

    இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.

    கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.

    இத்திருக்கோவிலில் இறைவன், பக்தவச்சலர் என்னும் திருப்பெயரில் எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவிலில் அம்பிகை பெயர் திரிபுரசுந்தரி.

    மலை மேல் உள்ள வேதகிரீசுவரர் கோவிலில் அம்பிகை, பெண்ணின் நல்லாள் என்னும் திருப்பெயர் பூண்டு எழுந்தருளி, பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றாள்.

    இவ்வம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். தாழக்கோவிலினுள் நந்தி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது.

    தாழக் கோவில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    மலைக்கோவில் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் ராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.

    • இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.
    • மலையின் மீது உள்ள கோவிலை ‘வேதகிரிக் கோவில்’ என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை ‘தாழக்கோவில்’ என்றும் கூறுகின்றனர்.

    திருக்கழுக்குன்றம் மலையை சுற்றி வரும்போது விசுவாமித்திரர் தீர்த்தம் கோடி விநாயகர் தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகியவற்றை காணலாம்.

    மலைமீது உள்ள லிங்கப் பெருமானுக்கு பின்புறம் மலையைக் குடைந்து அமைத்த மும்மூர்த்திகளின் உருவங்களையும் மற்றும் பல சிற்பங்களையும் காணலாம்.

    இத்தலத்து மலையின் மீது ஒரு திருக்கோவிலும், மலை அடிவாரத்தில் ஊரின் நடுவே ஒரு திருக்கோவிலும் அமைந்து விளங்குகின்றன.

    மலையின் மீது உள்ள கோவிலை 'வேதகிரிக் கோவில்' என்றும், ஊரின் நடுவே உள்ள கோவிலை 'தாழக்கோவில்' என்றும் கூறுகின்றனர்.

    வேதகிரீசுவரர் திருக்கோவில் மலை மீது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    இக்கோவிலின் கருவறை பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் குடைந்து ஆக்கப்பட்டது.

    போல தோன்றும். கருவறை உட்புறச்சுவர்களில் பிரம்மன், விஷ்ணு, சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    கருவறையுள் வேதகிரீசுவரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகின்றார்.

    வேதகிரீசுவரர் கோவிலின் வடபக்கமாக இருக்கும் படிகளின் வழியாக இறங்கினால், குடைவரை கோவில் ஒன்றை கண்டு வழிபடலாம்.

    • மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.
    • அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

    மாணிக்கவாசக சுவாமிகளும் இங்கிருந்தே இறைவனை கண்டு திருப்பாடல் பாடியுள்ளார்.

    இறைவனும் அவருக்கு குருவடிவாக எழுந்தருளில் காட்சியளித்துள்ளார். இதனை மணிவாசகரே

    "கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து

    காட்டினாய்க் கழுக்குன்றிலே"

    எனக் குறிப்பிட்டு உணர்த்துகின்றார்.

    இத்தலத்து மலையை கிரிவலமாக சுற்றி வரும்போது சுற்று முடிவதற்குள் சிறிது தூரத்தில் மூவர்பேட்டை அமைந்துள்ளது.

    மலையைச் சுற்றி வரும்போது சஞ்சீவி மலை இருக்கும் இடம் ஒன்று வருகின்றது.

    அவ்விடத்தில் வேப்ப மரங்கள் மிகுதியாக உள்ளன. கலுங்கல்மேடைகளும், ஒரு கிணறும் உள்ளன.

    இம்மலையைச் சுற்றி வருகின்றவர்கள், சிறிது நேரம் இங்கு உட்கார்ந்து வேப்பங்காற்றையும், துய்த்து, இம்மலையடிவாரத்தில் உள்ள செம்மண்ணை எடுத்து நெற்றியிலும், உச்சியிலும் பூசிக் கொள்வார்கள்.

    இவ்வாறு பயன்படுத்தப்படும் மண், மலை மருந்து என்றும், இதனை அவ்வாறு பயன்படுத்துவதால் நோய் நீங்கும் என்றும் கூறுவார்கள். கிணற்றுநீர் சஞ்சீவி மலையின் ஊற்றுநீர் என்று அதனையும் பருகி இன்புறுவார்கள்.

    இச்சஞ்சீவி மலை பகுதியை கடந்து செல்லும்போது மாணிக்கவாசகருக்கு இறைவன் திருவடிதரிசனம் தந்த திருவடிகளை காணலாம். அவற்றை கடந்ததும் சிறுகுன்றின் மேல் திருமலை சொக்கம்மாள் கோவிலை கண்டு வணங்கலாம்.

    • இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.
    • லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை.

    பிரம்மனும், விஷ்ணுவும் இத்தலத்தில் இறைவனை பூஜைகள் செய்து வழிபட்டதற்கு சான்றாகவே இத்தலத்து கோவில் கருவறையில் பிரம்மன், விஷ்ணு முதலியோர் திருவுருவங்களும் காட்சி தருகின்றன.

    இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.

    லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை. இதனை 'இடிமுழக்கு' என்று சொல்கிறார்கள். அதாவது இந்திரன் பூசை செய்வதாக ஐதீகம்.

    வேதங்களே இத்தலத்தில் மலைவடிவமாக விளங்குவதால் நாயன்மார்கள் மூவரும் மலை மீது ஏறி செல்லவில்லை. மலையடி வாரத்திலிருந்தே இறைவனைப் போற்றி பதிகங்கள் பாடிச் சென்றுள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நின்று பதிகம் பாடிய இடம் இப்போது 'மூவர்பேட்டை' என்று வழங்கப்படுகின்றது.

    இங்கு மூவர் திருவுருவங்களும் அமைந்த திருக்கோவில் உள்ளது.

    • வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு.
    • இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்தில் காலந்தோறும் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற கழுகுகள் விபரம் வருமாறு:

    கிரேதாயுகத்தில் &சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகள்.

    திரேதாயுகத்தில் &சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகள்

    துவாபரயுகத்தில் &சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகள்

    கலியுகத்தில் &சம்பு, ஆதி என்னும் கழுகுகள்.

    இந்த 2 கழுகுகளும் பூசித்துப் பேறுபெற இத்தலத்து மலையை வணங்கிக் கொண்டு வருகின்றன.

    கழுகுகள் மட்டுமின்றி இத்தலத்தில் நந்திதேவர், அட்டவசுக்கள், பசு, இந்திரன், வராகன், வேதங்கள், விஷ்ணு, பிரமன், முருகன், சந்திரன், கோடிருத்திரர் ஆகியோரும் இறைவனைப் பூசித்து வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளனர்.

    கோடிருத்திரர் இத்தலத்தில் இறைவனை பூசித்ததற்கு சான்றாக, இத்தலத்து சங்கு தீர்த்தக்கரைக்கு தென்கிழக்கில் சிறிது தூரத்தில் ருத்திரகோடீசுவரர் திருக்கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

    வேதங்கள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வழிபட்டதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு வேதகிரீசுவரர் என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்து மலைக்கு வேதகிரி என்னும் திருப்பெயரும் உண்டு.

    இத்தலத்து மலையே வேத வடிவமானது. இம்மலை ரிக், யசுர், சாம, அதர்வணம் போல நான்கு குன்றுகள் இணைந்திருப்பதே இதற்கு சான்று.

    • சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்
    • எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள் தம் 37-வது ஆண்டு ஆரம்பத்தில் 25-12-1930 பிரமோதூத வருடம் மார்கழி மாதம் 10-ம் நாள் வியாழக்கிழமை மாலை யானை, குதிரை பரிவாரங்களுடன், அடிவாரத்தில் வந்து தங்கி 10 நாட்கள் இருந்தார் 2-1-1931 வெள்ளிக்கிழமை பட்டணப் பிரவேசம் செய்தார். (நகர்வலம் வந்தார்) 4-1-1931 மாலை புறப்பட்டுச் சென்றார்.

    இரண்டாவது முறையாக இரண்டாண்டு கழித்து ஆங்கிரஸ வருடம் மாசி மாதம் வந்து மேலவீதியில் நான்கு நாட்கள் தங்கினார்.

    மூன்றாம் முறையாக சுமார் 12 ஆண்டு கழித்து வந்து சங்குதீர்த்த வடக்கு கரையில் பசுமடத்தில் தங்கி காலை, மாலை இருவேளையும் சங்குதீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபட்டார்.

    இத்தலத்தில் திருவாவடுதுறை ஆதீனமடம், குன்றக்குடி ஆதீனமடம் முதலியன உள்ளன.

    சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் என்று புராண வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    ×