search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • நதிகள் பலவும் உன்னை வணங்கிட
    • பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

    ஓம் ஜெய ஜெய காவேரி

    அம்மா அன்னையே காவேரி!

    அன்பினால் உனக்கு ஆரத்தி செய்தோம்

    அன்னையே காவேரி. ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    அகத்திய முனிவரின் தவத்தில் பிறந்தாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!

    கணபதி அருளால் தரணியில் வந்தாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

    (ஓம் ஜெய)

    குடகினில் தோன்றி பூமியில் தவழ்ந்து

    கடலினில் கலந்தாயே, அம்மா கடலினில் கலந்தாயே!

    மாந்தர்கள் வணங்கிட வளம் பல தருவாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

    (ஓம் ஜெய)

    நதிகள் பலவும் உன்னை வணங்கிட

    பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

    நாங்களும் உன்னை வணங்கிட வந்தோம்

    பாவங்கள் தீர்ப்பாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    உந்தன் கரைதனில் புனித தலங்கள்

    தோன்றி வளர்ந்தனவே, அம்மா தோன்றி வளர்ந்தனவே!

    பக்தியும் தவமும் பெருகி வளர்ந்திட

    அருளினைத்தந்தாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    மாலையில் உனக்கு ஆரத்தி செய்தோம்

    வளம்பெற அருள்வாயே, அம்மா வளம் பெற அருள்வாயே!

    உன்னை வணங்கிட ஒன்றாய்ச் சேர்ந்தோம்

    உயர்வினைத் தந்திடுவாய் ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    • வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.
    • குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    நதிகளை நம் முன்னோர்கள் நம் குடும்பத்தில் ஒருவர் போல கருதினார்கள். அதனால்தான் நதிகளை "தாய்" என்று அழைத்தனர்.

    தாய்க்கும், தாய்ப் பாசத்துக்கும் இந்த உலகில் ஈடு இணையே கிடையாது.

    ஒரு தாய், எத்தனை பிள்ளைகள் பெற்றாலும், அனைவரையும் பாசத்தோடு வளர்ப்பாள். கண் இமைக்குள் வைத்து பாதுகாப்பது போல பாதுகாப்பாள்.

    அத்தகைய தாய் போன்றதுதான் நதியும். உணவு உற்பத்திக்கும், குடிநீருக்கும் நதிகள்தான் அடித்தளமாக உள்ளன.

    எனவேதான் நதிகளை தாயாக கருதிப் போற்றினார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நதிகளை கும்பிட்டு வணங்கினார்கள்.

    நம் முன்னோர்களிடம், நதிகளைப் போற்றும் பண்பு, உணர்வோடு இரண்டற கலந்திருந்தது.

    அது மரபு போல காலம், காலமாக நீடிக்க வேண்டும் என்பதற் காகத்தான் நதிக்கரைக்கு விழாக்கள் எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    ஜோதிட ரீதியாக கணித்து, ஒவ்வொரு கால கட்டத்திலும் நதிகளுக்கு விழா எடுக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தனர்.

    கும்ப மேளாக்கள், தீர்த்த மாடல்கள் இப்படித்தான் தோன்றின. நம் மூதாதையர்கள் இந்த விழாக்களை மிக, மிக கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

    நதிகளை அவர்கள் எப்படி மதித்தனர், பேணி பாதுகாத்தனர் என்பது சங்க கால இலக்கியங்களில் நிறைய உதாரணங்களாக உள்ளது.

    வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.

    குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    வட மாநில மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கங்கை மாதாவுக்கு ஜே என்று கூறிக் கொள்ள தவறுதில்லை.

    கங்கை நதியை அவர்கள் எந்த அளவுக்கு உயிர்மூச்சு போல வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

    குறிப்பாக குரு பெயர்ச்சி நடக்கும் போது, அது ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்குள் செல்லும்போது, அந்த ராசிக் குரிய நதியில் புஷ்கரம் நடத்துவார்கள்.

    அதாவது அந்த நதியில் புனித நீராடுவார்கள். ஹோமம் வளர்த்து அந்த நதியை வணங்குவார்கள்.

    அதோடு அந்த நதிக்கு ஆரத்தி காட்டி தங்கள் நன்றியைத் தெரிவிப்பார்கள்.

    • மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.
    • 63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    'புஷ்கரம்' என்பது ஒரு வடமொழி சொல். நீரில் இறைவனின் அருள்சக்தி சேர்ந்தால் தீர்த்தம் என்று பெயர்.

    அந்த அருள் சக்தி நிறைந்த தீர்த்தங்கள், திருக்கோவில்களில் இருக்கும். புண்ணிய நதிகளும் தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் 7 புண்ணிய நதிகள் உள்ளன.

    'புஷ்கரம்' என்பவர் வருண பகவானின் தாய் மாமன் ஆவார். அவர் எல்லா நதிகளிலும் அருள்பாலித்து கொண்டு தீர்த்தமாக மாறி உயிரினங்களை வாழ வைக்கிறார்.

    இந்த புண்ணிய நதிகள் எங்கு பாய்கிறதோ, அங்கு பூமி விளையும், வாழ்வு வளம்பெறும்.

    குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையும் காலத்தில், துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கரம் விழா நடக்கிறது.

    குரு பகவான் ஒரு ஆண்டு அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அந்த ஆண்டு நடைபெறும் புஷ்கரம், காவிரி மகாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் 3 ஆயிரம் துறவியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற பழமொழி உள்ளது.

    இதில் ஆயிரம் என்பது மங்கலம், சுபம், பரமசிவம் என்ற ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கிறது.

    அத்தனையும் மயிலாடுதுறை மக்கள் பெறுவார்கள்.

    மயிலாடுதுறை ஒரு முக்தி ஸ்தலம் ஆகும்.

    இங்கு பாயும் புண்ணிய நதியான காவிரியில் மகாபுஷ்கரம் விழாவின் போது புனித நீராடினால் அனைவரும் சுப வாழ்வு வாழ்ந்து பரமானந்தம் பெறலாம்.

    இங்கு ரிஷப பகவான் பாதாளத்தில் இருந்து வெளிபட்டு வழிபடுகிறார்.

    மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.

    63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    உலகிலேயே ஞானபூமி, அருள்பூமி, தெய்வீக பூமி என்று போற்றப்படுவது மயிலாடுதுறை ஆகும்.

    இந்த புனித பூமியை தெய்வீக பூமியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.
    • நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

    காவிரி புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படும் திருவிழா ஆகும்.

    12 ராசிகளும் 12 நதிகளுக்கும் உரியது. அவை மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவிரி, விருச்சிகம்-தாமிரபரணி, தனுசு-சிந்து, மகரம்-துங்கபத்ரா, கும்பம்-பிரம்மபுத்ரா, மீனம்-பரணீதா.

    குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.

    நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

    மேலும் நமது வீடுகளில் உள்ள பூஜை விக்ரகங்களையும், கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் காவிரிக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி செய்து வருதல் அல்லது காவிரியிலிருந்து தீர்த்தக்கலசம் எடுத்து வந்து மூலருக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வது நல்லது.

    இந்தப் புனித நாட்களில் இல்லறத்தார்கள் பித்ருக்களுக்கு காவிரி கரையில் பிண்டம் கொடுப்பது நல்லது. காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து வீடுகளில் தெளித்துப் புனிதப்படுத்திக் கொள்ளலாம்.

    துவக்க நாளான்று அகில பாரதிய துறவியர்களின் மாபெரும் சங்கமத்துடன் ஒன்று கூடி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மாநாடாக நடைபெறும்.

    நாகை மாவட்ட பூஜாரிகளின் பேரமைப்பு அன்னை காவிரியின் தீர்த்த கலசமெடுத்து மாபெரும் ஊர்வலமாக வருவார்கள்.

    13 நாட்களும் யாகங்கள், கோவில் உற்சவமூர்த்திகளின் தீர்த்தவாரி, துறவியர் பெருமக்களின் புனித நீராடல், லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவார, திருவாசக, திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவருட்பா பாராயணங்கள் மற்றும் தினந்தோறும் காவிரி ஆரத்தி, மாலை சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    உலகத்தின் நதிகளிலேயே மிகவும் புண்ணியமும் பவித்ரமுமான அன்னை காவிரியின் கரையிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நாம் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி புனிதம் அடைவோமாக!

    அன்னை காவிரியின் மஹா புஷ்கரத்தில் கங்கையும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், பதினெண் சித்தர் பெருமக்களும், வாசம் செய்வதால் நாம் நீராடி வழிபாடுகள் செய்து காவிரித்தாய்க்கு மாலை நேரத்தில் ஆரத்தி செய்வதால் நமது பாவங்கள் தீர்ந்து வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
    • அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு.

    நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.

    இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.

    புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.

    அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.

    இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.

    புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.

    (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.

    அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

    • வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள்.
    • இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம்.

    இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.

    பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.

    பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி.

    ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

    • மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
    • பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும்.

    இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.

    மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.

    பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை.

    நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம்.

    நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

    • நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே.
    • ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

    பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா

    மகேஸ்வரி- சிவன்

    கவுமாரி- குமரன் (முருகன்)

    வைஷ்ணவி- விஷ்ணு

    வராஹி- ஹரி (வராக அவதாரம்)

    நரசிம்மி- நரசிம்மர்

    இந்திராணி- இந்திரன்.

    இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

    • நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
    • அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    தேவியரின் வாகனம்

    இந்திராணி - யானை

    வைஷ்ணவி - கருடன்

    மகேஸ்வரி - ரிஷபம்

    கவுமாரி - மயில்

    வராகி - எருமை

    அபிராமி - அன்னம்

    நரசிம்மி - சிங்கம்

    சாமுண்டி - பூதம்

    அம்பாளை வணங்குவதன் பலன்

    அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

    இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.

    இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்

    ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்

    ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.

    ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்

    விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,

    மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.

    ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்

    ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

    கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

    • நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
    • அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    உயிரைக் காக்கும் நவராத்திரி

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.

    இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.
    • தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.

    ஓர் ஆண்டில் மொத்தம் இருபத்தைந்து ஏகாதசிகள் வரும்.

    மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது. இதுவே வைகுண்ட ஏகாதசி எனப்பெறும் சிறப்புடையதாகும்.

    ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.

    தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.

    ஏகாதசியன்று காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தீர்த்தம், துளசி ஆகியவற்றுடன் அர்ச்சனை செய்த தேங்காய், பழம், பிரசாதங்களை வாங்கி வந்து அவற்றையே உட்கொள்ள வேண்டும்.

    அன்று திவ்ய தேசங்களில் திறக்கப்படும் வைகுண்ட வாசலில் சென்று, கருட சேவையை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.

    அடுத்த நாள் துவாதசியில் காலையில் பச்சரிசி அன்னமும், அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சமைத்து உண்ணலாம்.

    மதியம் பலகாரம் சாப்பிடுவார்கள்.

    மன்னர்களான அம்பரீஷன், ருக்மாங்கதன் ஆகியோர் ஏகாதசி விரதம் அனுஷ்டித்துப் பலன் அடைந்தவர்கள்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம், புகழ், செல்வம், ஆரோக்கியம் முதலியன உண்டாகும்.

    வைகுண்டம் கிட்டும்.

    • சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.
    • பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

    சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.

    பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

    பங்குனி உத்திரத்தன்று காவடிகளும், பால்குடங்களும் எடுத்து முருகனை வழிபடுவது மரபாகும்.

    அன்று உபவாசத்துடன் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு, அவனுக்குரிய ஸ்லோகங்களை பாடிப்பரவி இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

    பழ ஆகாரங்கள் சாப்பிடலாம்.

    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது.

    அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். பழத்தை உணவாகக் கொள்வதே பழ ஆகாரம் அதாவது பலகாரம் ஆகும்.

    ஆனால் சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் "பலகாரம்' என்று தவறாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

    ×