என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
இன்றைக்கு நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி அவர்களேயாவார்.
அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றைச் சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.
- தம்மிடம் விடைபெற்றுச் செல்வோர்க்கெல்லாம் பாபா தம் கையாலேயே உதிகொடுத்தனுப்புவார்.
- சில சமயங்களில் பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவார்.
அக்னி குண்டம் அணையாமல் எக்காலத்திலும் எரிந்து கொண்டே இருப்பதற்காக அவ்வப்பொழுது விறகுக்கட்டைகள், மட்டையுடன் கூடிய தேங்காய்கள், கற்பூரம் போன்றவை அதில் போடப்படும்.
அவை எரிந்த பின் கிடைக்கும் சாம்பலே "உதி" என வழங்கப்படுகிறது.
உதியின் மகிமையை விளக்கிச் சொல்வது எளிதல்ல. அது மன நோயைத் தீர்க்கும் மாமருந்து. உடல் நோயைத் தீர்க்கும் உயர்ந்த மருந்து. பாம்பு தீண்டினாலும், தேள் கொட்டினாலும் கடிவாயில் வைத்தால் நஞ்சைக் கக்க வைக்கும் நல்ல மருந்து.
பெண்கள் பிரசவ வேதனையில் துடிக்கும் போது உதியை வயிற்றின் மீது தடவி விட்டு சிறிதளவு நீரில் கரைத்துக் கொடுத்தால் வேதனையே இல்லாமல் மகப்பேறு உண்டாகும்.
இந்த நோய் தீராது என்று மருத்துவர் கைவிட்ட பின்னரும் உதியை நீரில் கரைத்துக் கொடுக்க நோய் இருந்த இடம் தெரியாமல் விரைவில் பறந்து போய்விடும்.
தம்மிடம் விடைபெற்றுச் செல்வோர்க்கெல்லாம் பாபா தம் கையாலேயே உதிகொடுத்தனுப்புவார் சில சமயங்களில் பக்தர்களின் நெற்றியில் பூசி விடுவார்.
தொலை தூரத்தில் இருந்தாலும் பக்தர்கள் துன்பம் துடைக்கத் தக்க சமயத்தில் கிடைக்கும்படி உதி கொடுத்தனுப்புவார் பாபா.
சாய் பக்தர்களின் உயர்ந்த உடைமைகளில் உதிமேலான இடத்தைப் பெற்றுள்ளது. உதி இல்லாத சாய் பக்தர்களின் இல்லமே இல்லை எனலாம்.
உதியைப் பயன்படுத்தாத சாய் பக்தரே இல்லை எனலாம்.
- இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.
- அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
சீரடியில் சாய்பாபா வாழ்ந்திருந்த மசூதியின் நடுவில் அமைந்திருக்கும் அக்னி குண்டமே துனி எனப்படுவது. மசூதியின் நடுவில் அக்னி குண்டம் எப்படி வந்தது?
ஒரு நாள் மசூதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்பொழுது பாபாவுக்குப் புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அங்கே நெருப்பு இல்லை.
இது தான் தக்க சமயம் என்று எண்ணிய மகல்சாபதி, தாஸ்கணு முதலிய பக்தர்கள், பாபா நெருப்புக்காக தினந்தோறும் அலைய வேண்டியதாக இருக்கிறது.
இங்கேயே எப்பொழுதும் நெருப்பு கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்றனர்.
எப்பொழுதும் நெருப்பு என்று கேட்டு விட்டு வியப்படைந்தவர் போல் பாபா தம் இருப்பிடத்திலிருந்து எழுந்து சென்றார்.
மசூதியின் மத்தியில் போய் நின்று தம் கையில் இருந்த குச்சியால் தரையில் தட்டினார். உடனே அந்த இடத்தில் நெருப்பு உண்டாகி எரியத் தொடங்கியது.
இந்த அற்புதச் செயலைக் கண்டு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கி விட்டனர்.
அவர்களுடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பாபா ஒரு அவதார நாயகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
பாபா பக்தர்களை பார்த்து நான் உண்டாக்கிய இந்த நெருப்பு என்றென்றும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும்.
இதிலிருந்து கிடைக்கும் "உதி" (சாம்பல்) துன்பங்களையெல்லாம் போக்கும்.
பிணிகளை நீக்கும் என்று கூறினார். பின் மசூதியில் பணிபுரியும் அப்துல்லாவை அழைத்து இந்த நெருப்பை அணையவிடக்கூடாது.
அவ்வப்பொழுது விறகுக்கட்டைகளைப் போட்டு எரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
நாள் தோறும் தமக்குப் பக்தர்கள் தட்சணையாக செலுத்தும் தொகையில் தான தர்மங்கள் செய்தது போக மீதி இருக்கும் தொகையில் பாபா அக்னி குண்டத்திற்காக விறகுக்கட்டைகளை வாங்கி விடுவார்.
அக்னி குண்டம் இல்லாத கோவில் எப்படி என் கோவிலாகும் என்று பாபாவே கேட்டதுண்டு.
பாபாவின் "எம் மதமும் சம்மதமே" என்பதை விளக்குவதாய் உள்ளது அக்னி குண்டம். இந்துகளுக்கும், பார்சிகளுக்கும் புனிதமானது அக்னி. கோவிலுக்குச் சென்றால் அக்னி குண்டத்தை வலம் வராத பக்தர்களே இல்லை எனலாம்.
- துயரங்கள் துடைப்பாய் போற்றி
- துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி
சீரடி வாசா போற்றி
சீலங்கள் தருவாய் போற்றி
ஞாலத்தின் ஒளியே போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
நான்மறைப் பொருளே போற்றி
ஞானத்தின் ஒளியே போற்றி
கற்பக விருட்சம் போற்றி
கற்பூர ஒளியே போற்றி
துளசியாய் இருப்பாய் போற்றி
துயரங்கள் துடைப்பாய் போற்றி
துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி
துணைநின்று காப்பாய் போற்றி
பாபங்கள் தீர்ப்பாய் போற்றி
பலன்களை அருள்வாய் போற்றி
கிருஷ்ணனும் நீயே போற்றி
பரமனும் நீயே போற்றி-
சிவனும் நீயே போற்றி
தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி
பாற்கடல் நீயே போற்றி
பசுமையும் நீயே போற்றி
சலனங்கள் தீர்ப்பாய் போற்றி
சங்கடம் தீர்ப்பாய் போற்றி
உலகெல்லாம் நீயே போற்றி
உன்னதத் தெய்வம் போற்றி
வீரத்தை தருவாய் போற்றி
வெற்றிகள் அருள்வாய் போற்றி
பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி
பக்குவம் அருள்வாய் போற்றி
நலம்தந்து காப்பாய் போற்றி
நன்மையின் உருவே போற்றி
வழிகாட்டி அருள்வாய் போற்றி
வழித்துணை ஆவாய் போற்றி
புகழ்தந்து காப்பாய் போற்றி
புண்ணிய நேசா போற்றி
கருணையின் உருவே போற்றி
கலிகளைத் தீர்ப்பாய் போற்றி
அதர்மங்கள் அழிப்பாய் போற்றி
அறங்களை வளர்ப்பாய் போற்றி
நற்குணத் தெய்வம் போற்றி
நலம்பல தருவாய் போற்றி
காண்பதற்கு எளியாய் போற்றி
கனிவுடன் வருவாய் போற்றி
எல்லையில்லாப் பரம்பொருள் போற்றி
இல்லத்திற்கு வந்தருள்வாய் போற்றி
அரிதினும் அரிதாய் இருப்பாய் போற்றி
எளிதினும் எளிதாய் வருவாய் போற்றி
பொன்மலர் மணமே போற்றி
பொன்மனத் தெய்வம் போற்றி
வண்ணங்கள் நீயே போற்றி
வளர்கலை நீயே போற்றி
எண்ணங்கள் நீயே போற்றி
இதயமும் நீயே போற்றி
வானவர்க்கு அரசே போற்றி
வையத்தின் தெய்வம் போற்றி
கவிகளும் நீயே போற்றி
காவியம் ஆவாய் போற்றி
எளியவர்க்கு தாயே போற்றி
இனிமையாய் காப்பாய் போற்றி
தவறுகள் தடுப்பாய் போற்றி
தகுதிகள் தருவாய் போற்றி
வேதனை தீர்ப்பாய் போற்றி
வித்தகத்தேவா போற்றி
நன்மையின் உருவே போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
சங்கடம் தீர்ப்பாய் போற்றி
சமரசத் தெய்வம் போற்றி
அனுதினம் துதிப்போம் போற்றி
ஆனந்தம் தருவாய் போற்றி
துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி
துணிவைத் தருவாய் போற்றி
வேண்டுவன தருவாய் போற்றி
விரைந்து வந்து அருள்வாய் போற்றி
மோகத்தை அழிப்பாய் போற்றி
முன்வந்து காப்பாய் போற்றி
நினைத்ததை தருவாய் போற்றி
நிம்மதி அருள்வாய் போற்றி
மகிழ்ந்திட வருவாய் போற்றி
மங்கலம் தருவாய் போற்றி
எளியவர்க்கு அருள்வாய் போற்றி
இனியவரை காப்பாய் போற்றி
அனுதினம் துதிப்போம் போற்றி
அருள்நெறி காப்பாய் போற்றி
மலர்ப்பாதம் உடையாய் போற்றி
மனங்கனிந்து அருள்வாய் போற்றி
நற்குண நாதா போற்றி
நலம் தந்து காப்பாய் போற்றி
குங்கும நிறத்தாய் போற்றி
குலம்காக்க வருவாய் போற்றி
சந்தன மலராய் போற்றி
சந்ததம் காப்பாய் போற்றி
பொன்மனத் தெய்வம் போற்றி
புகழ்தந்து அருள்வாய் போற்றி
நதிஎன வந்தாய் போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
கவலைகள் தீர்ப்பாய் போற்றி
கலங்கரை விளங்கே போற்றி
கீதையாய் வந்தாய் போற்றி
கீதங்கள் நீயே போற்றி
பக்தி கொண்டோம் போற்றி
பரவசம் தந்தாய் போற்றி
நாமங்கள் சொல்வோம் போற்றி
நற்துணை ஆவாய் போற்றி
வந்தனை செய்தோம் போற்றி
வரம்தந்து அருள்வாய் போற்றி
ஓம்காரப் பொருளே போற்றி
உடன்வந்து அருள்வாய் போற்றி
சாயி ஜோதியே போற்றி
சகலமும் அருள்வாய் போற்றி.
- செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும்.
- செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன. அதுபோலத்தான் வாழ வேண்டும்.
செல்வர்களாய் இருப்பவர்களிடம் பணிவு வேண்டும். செடிகளில் பழங்கள் அதிகமானால் அவை வளைந்து கொடுக்கின்றன.
அதுபோலத்தான் வாழ வேண்டும்.
தாழ்மையாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்வதால் அனைவரிடமும் பணிவாய் இருக்க வேண்டும் என்று பொருள் அன்று. கொடியவர்களிடம் கடுமையாகத்தான் இருக்க வேண்டும்.
அறவழிகளில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாய் பொருளை தானம் செய்து ஆண்டியாகி விடக் கூடாது. வாழ்க்கைக்கு ஓரளவு செல்வம் அவசியமே. அதன் பொருட்டு கஞ்சனாகவும் இருக்கக்கூடாது.
சிறியதை பெரிது செய்யாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அதற்காக அதிலேயே மூழ்கி கடவுளை மறந்து விடக்கூடாது.
மனம் கட்டுக்கு அடங்காது. அதை அடக்க முயல வேண்டும். மனிதனது நிம்மதி என்பது அதில் தான் இருக்கிறது.
ஈயானது எல்லா பொருட்கள் மீதும் உட்காருகிறது. ஆனால் தீயை அணுகும் போது பறந்து விடுகிறது.
அது போலத்தான் மனமானது சிற்றின்பங்களில் மயங்கி பேரின்பமான கடவுளை நெருங்கும் போது வேறு புறம் போய்விடுகிறது.
பிறவிகளில் மானுடப் பிறவியே மிக மிக உயர்ந்தது. அந்த பிறவி தான் தன்னை படைத்தவனை நினைத்து ஆராதித்து ஆனந்தம் அடைகிறது.
வழிபாடுகளுள் உருவ வழிபாடு மிகவும் உயர்ந்தது. அந்த உருவத்தை மனத்தில் எண்ணி வழிபடும் போது மனம் ஒரு நிலையை அடைவது எளிதாகிறது.
கடவுளின் திருவிளையாடல்களை எண்ணினாலும், தியானம் செய்வதாலும், புராணங்களை பாராயணம் செய்வதாலும் கடவுளை நெருங்குவதற்கு மேலும் வழி பிறக்கிறது.
சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுவதும் நன்மையே பயக்கும். வாழ்வில் ஆசைகளை குறைத்துக்கொண்டே வந்தால் நிம்மதி பெருகிக்கொண்டே போகும்.
ஹரி யார் என்று அறியாதவர்கள் பண்டரிபுரத்திற்கு யாத்திரை சென்று பலன் என்ன? இப்படி யாத்திரை போகிறவர்கள் பலர் உண்மையான பக்தியால் போவதில்லை.
பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.
ஆத்மாவை தூய்மையாய் வைத்திருப்பவன் என்றும் நிம்மதியாய் வாழ்கிறான்.
- எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.
- எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.
எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.
எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.
முற்பிறப்பில் நீ செய்த கர்மாவின் பலனையே இப்போது நீ அனுபவிக்கிறாய். அதன் பலனால் தான் நீ மனித உடல் கொண்டு உள்ளாய்.
உலகில் மனிதன் மட்டும் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதாய் நீ நினைத்தால் அது தவறு. பெரிய தவறு. எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் கர்மாவை பொறுத்து வேறுபாடு உள்ளது. நுட்பமாய் நோக்கினால் உனக்கு அது புரியும்.
நாய்களை பொதுவாக நோக்கினால் அவற்றிடையே உள்ள வேறுபாடு தெரியாது. அதே சமயம் உற்று நோக்கினால் உண்மை தெரியும். பணக்காரன் வீட்டு நாய் பஞ்சனையில் உலாவுகிறது. ஏழை வீட்டு நாய் குப்பை மேட்டில் தான் உழல்கிறது.
மனிதனுக்கு பகையாய் இருப்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறுந்தான். இவை அனைத்துமே மாயையின் தோற்றங்கள்.
கடலில் நீந்துபவன் ஒவ்வோர் அலையையும் கடந்து கரை சேர்வது போல, நல்வாழ்க்கையை பெற விரும்புபவன் இந்த ஆறு அலைகளை கடக்க வேண்டும்.
செல்வன் ஒருவன் பொன்னாபரணம் ஒன்றை வாங்கி அணிந்தால் ஏழை ஒருவன் அதை பார்த்து பொறாமை அடைகிறான்.
தானும் அது போன்ற ஆபரணம் ஒன்றை பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது லோபம், மாயையால் தோன்றும் ஒவ்வொன்றும் இப்படிப்பட்டவை தான்.
- என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.
- இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.
வருவனவற்றை எல்லாம் எதிர்கொள்பவன் தான் துறவி. வந்த ஒரு நிகழ்ச்சிக்கு நொந்து வெந்து விரக்தியானவன் எப்படி துறவியாக முடியும்?
துறவு என்பது ஒரு கடமை. அதுபோல இல்லறம் என்பதும் ஒரு கடமை தான். அதில் ஒவ்வொருவரும் தம் கடமை சரிவர செய்ய வேண்டும்.
குழந்தை பிறப்பதும் உறவினர் இறப்பதும் முன் கர்மாவின் பலன். அதை உலகத்தை உருவாக்கிய பிரம்மாவினாலும் மாற்ற இயலாது.
சூரியனையும் சந்திரனையும் பார்த்து எப்போதும் தோன்றும் இடத்திலிருந்து இன்று இரண்டு அடி தள்ளி உதிக்க வேண்டும் என்று யாராவது கட்டளை இட முடியுமா?
பிறந்த ஒவ்வொருவரும் கர்மப்படி தமக்கு உரிய காலத்தில் மரணம் உண்டு என்பதை உணர வேண்டும்.
பெற வேண்டியதை உரிய காலத்தில் பெறுவது எப்படி தவிர்க்க முடியாதோ, அது போலவே இழக்க வேண்டியதையும் உரிய காலத்தில் இழந்து தான் ஆக வேண்டும்.
சம்சாரத்தை துறப்பதில் நிம்மதி உள்ளது என்று கூறுவதில் உண்மை இருக்கிறது என்றாலும், அதுவே முழுமையான உண்மையாகாது.
ஒவ்வொரு மனிதனும் பிறந்த பின் எப்படி வாழ்ந்தாலும் அவன் மறையும் வரையில் ஏதோ ஒரு வழியில் சம்சார பந்தத்திற்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். இருந்து தான் ஆக வேண்டும். இது தான் உலக நியதி.
நான் கூட ஒரு வகையில் சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டு தான் விழிக்கிறேன். என்னை நம்பியவர்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.
என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.
இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.
- என்னுடைய லீலைகளையும் கதைகளையும் தொகுத்து சொல்லப்போனால் நான் உள் கருவியாய் இருந்து உதவுவேன்.
- நீ வெளிக் கருவியாய் இயங்க வேண்டும்.
என்னுடைய லீலைகளையும் கதைகளையும் தொகுத்து சொல்லப்போனால் நான் உள் கருவியாய் இருந்து உதவுவேன்.
நீ வெளிக் கருவியாய் இயங்க வேண்டும்.
சுருங்கச் சொன்னால் என் வரலாற்றை நானே எழுதியது போல் உண்மையும் உயர்வும் தெய்வீகமும் உடையதாய் அமைய வேண்டும்.
எழுதுபவருக்கு தான் என்ற அகந்தை இருக்கக்கூடாது.
அகந்தை இன்றி எவன் என்னை நெருங்குகிறானோ அவனுக்கு நான் என்றும் நெருக்கமானவனாகவே இருப்பேன்.
என்னுடைய சரிதத்தையும் உபதேசங்களையும் படித்தால் பக்தர்கள் தம் மனங்களில் நம்பிக்கை வேரூன்ற பெற்று பேரின்ப நிலையை பெறுவார்கள்.
என் பக்தர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் எங்கு இருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் துன்பப்பட கூடாது.
- பாடல்கள் அனைத்தும் சாயிபகவானின் பாதச் சுவடுகள் பட்டவை.
- தெய்வீக மலர்கள், தேன் சொட்டும் கனிகள், பக்திப் பாசுரங்கள்.
இனிவரும் பாடல்கள் அனைத்தும் வசனமாகப் படித்து பகவானை வணங்கத்தக்க வகையிலும், இசை சித்தித்தவர்கள் அற்புதமாக பாடி பகவானை துதிக்க தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
பாடல்கள் அனைத்தும் சாயிபகவானின் பாதச் சுவடுகள் பட்டவை. தெய்வீக மலர்கள், தேன் சொட்டும் கனிகள், பக்திப் பாசுரங்கள்.
இவற்றை நினைத்தாலும் படித்தாலும் பாடினாலும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சாயி பகவானின் சர்வ சித்தியும் கிடைக்கும்.
சாயியை நினைக்க நிகைக்க,
அவர் நாமத்தைச் சொல்லச் சொல்ல
அவர் தெய்வீகத்தைப் படிக்கப் படிக்கப்
பாடப் பாட அவர் வருவார் அருள் தருவார்.
- சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
- அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.
பால யோகியாக, பாபா சீரடியில் தம் பொற்பாதங்களை பதித்த போது சிற்றூராக இருந்த அந்த ஊர், அதன் பின்னர் புண்ணிய திருத்தலம் ஆயிற்று.
இன்று புனித பெருநகராக மாறியது .
சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.
பாபாவின் பாத மலர்களில்...,
பக்தியுடன் தலை சாய்த்தால்...,
பாவங்கள் மறையும்....,
புண்ணியங்கள் நிறையும்.
- சாவடியில் நுழைந்தவுடன் வலது பக்கம் உள்ள கம்பிகளுக்கு பின்னே சாயிபாபா ஓய்வு எடுத்துக்கொள்வது வழக்கம்.
- இங்கும் பக்தர்கள் ஏராளமாக வந்து பாபாவை வணங்கி சென்றனர்.
சீரடி தலத்தில் இந்த சாவடிக்கு மசூதியிலிருந்து பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் செல்வது வழக்கம். 16.12.1910 முதல் பக்தர்கள் இங்கு பாபாவுக்கு காலை ஆரத்தியும், இரவு ஆரத்தியும் செய்து வழிபடத் தொடங்கினார்கள்.
சாவடியில் நுழைந்தவுடன் வலது பக்கம் உள்ள கம்பிகளுக்கு பின்னே சாயிபாபா ஓய்வு எடுத்துக்கொள்வது வழக்கம்.
இடப்பக்கத்தில் ஒரு நாற்காலி உள்ளது. ஒரு சமயம் பாபா தீவிரமான நோயால் பீடிக்கப்பட்டிருந்த போது ஒரு பக்தர் அந்த சக்கர நாற்காலியை பாபாவுக்கு அளித்தார்.
இங்கும் பக்தர்கள் ஏராளமாக வந்து பாபாவை வணங்கி சென்றனர்.
தினந்தோறும் காலை, பகல், மாலை நேரங்களில் வந்து இங்குள்ள வேப்ப மரத்தடியிலும், அத்தி மரத்தடியிலும் நீண்ட நேரம் பாபா உட்காருவது வழக்கம்.
இம்மரத்தடியில் ஒரு குழியை தோண்டி எண்ணெய் விளக்கு (அகண்ட தீபம்) ஏற்றி, இங்கு உள்ள அரச மரம் காய்ந்து பட்டு போன போது அதை பாபா உயிர்ப்பித்து அங்கு நவக்கிரஹ பிரதிஷ்டை செய்தார்.
லெண்டித் தோட்டத்தின் உள்ளே நுழையும் போது எதிரே தெரியும் கிணற்றிலிருந்து தான் பாபா தான் வளர்த்த செடிகளுக்கு நீர் கொணர்ந்து ஊற்றுவார்.
- துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
- துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாபாவினால் ஏற்றிவைக்கப்பட்டு இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த அகண்ட துனி (ஹோமகுண்டம்) இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
பக்தர் துயர் தீர்க்க பகவான் வழங்கி வந்த துனி இதிலிருந்து தான் உருவானது.
துனி ஆராதனை
துவாரகமாயியில் துனி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டி பாபாவிடம் முழு நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து கொண்டு துனி பூஜை செய்ய வேண்டும்.
துவாரகாமாயியில் துனிக்கு முன்புறமாக உட்கார்ந்த நிலையில் பாபாவின் முழு உருவப்படம் உள்ளது.
துவாரகமாயில் உட்கார்ந்து கொண்டு சாயி சத்சரிதத்தை பாபாவிடம் முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்வதினால் பக்தர்களின் பிரச்சனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காண பாபா வழி வகுக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்