search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்துக்கு 24 மணிநேரமாகிறது
    X

    திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்துக்கு 24 மணிநேரமாகிறது

    • இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது.
    • விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருப்பதியில் நேற்று 75,229 பேர் தரிசனம் செய்தனர். 35 618 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் கூட்டம் அலை மோதியது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் தர்மாவூரை சேர்ந்தவர் சோமசேகர். இவர் நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார்.

    திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வகுல விராந்தி தங்கும் விடுதியில் 102-வது அறையை வாடகைக்கு எடுத்து தங்கினர். விடுதியில் தங்கி இருந்தபோது குளிக்கச் சென்ற சோமசேகரின் மனைவி தான் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் செயினை கழற்றி வைத்துவிட்டு மீண்டும் எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.

    நேற்று காலை சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து விடுதிக்கு வந்த சோமசேகரின் குடும்பத்தினர் அவசர அவசரமாக விடுதியை காலி செய்து விட்டு சென்றனர்.

    விடுதி அறையை சுத்தம் செய்ய வந்த தேவஸ்தான ஊழியர்கள் குளியல் அறையில் இருந்த 7 பவுன் செயினை மீட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கழுத்தில் அணிந்து இருந்த செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த சோமசேகரின் மனைவி இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

    சோம சேகர் இது குறித்து தேவஸ்தான அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    அப்போது காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை சோமசேகர் தெரிவித்தார். பின்னர் விடுதியில் தவறவிட்ட நகையை தேவஸ்தான அதிகாரிகள் சோமசேகரிடம் ஒப்படைத்தனர்.

    தவறவிட்ட நகையை மீட்டு கொடுத்த தேவஸ்தான ஊழியர்களுக்கு பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×