search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு
    X

    வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு

    • 2-ந்தேதியிலிருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடக்கிறது.
    • பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.

    அதேபோல் திருப்பதியில் சீனிவாசம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் 12-ந்தேதி முதல் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும். பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×