என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாம வேத பாராயணம் மே 1-ந்தேதி தொடக்கம்
- 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது.
- சாமவேத பாராயணம் மே 1-ந்தேதி தொடங்கி ஜூன் 30-ந்தேதி வரை நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது. வேத பண்டிதர்கள் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் வீதம் 6 குழுக்களாகப் பாராயணம் செய்கிறார்கள். இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது. கொரோனா தொற்று பரவலின்போது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் நடந்தது. அதன் பிறகு ரிக் வேத பாராயணம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்