என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி கோவிலில் ஆத்யாயன உற்சவம் 22-ந்தேதி தொடங்குகிறது
- 22-ந்தேதி தொடங்கி 2023 ஜனவரி 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது.
- 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் ஆத்யாயன உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆத்யாயன உற்சவம் வருகிற 22-ந்தேதி தொடங்கி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது. இந்தத் திருவிழா வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்கள் முன்பு தொடங்கி நடக்கும் விழாவாகும்.
நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் எனப்படும் 12 ஆழ்வார்கள் எழுதிய 4 ஆயிரம் பாசுரங்கள் இந்த 25 நாட்களிலும் வைஷ்ணவர்களால் தினமும் ஓதப்படுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.
25 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 11 நாட்கள், 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள், 'ராப்பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. 22-வது நாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு, 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராஹ சாமி சாத்துமுறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்