search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தையின் கண்களை சுத்தம் செய்வது எப்படி?
    X

    குழந்தையின் கண்களை சுத்தம் செய்வது எப்படி?

    • அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
    • சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது.

    குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் முன், உங்களது கைகளை நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். சமையல் வேலை, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு கைகளை சரியாக கழுவாமல் குழந்தைக்கு அருகில் வருவது சரியல்ல. சாஃப்ட் பருத்தி துணி அல்லது பஞ்சை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து, கண்களை சுற்றி மெதுவாக துடைக்கவும்.

    கண்களில் அதிக நீர் வழிந்திருந்தாலும், அழுக்கு இருந்தாலும் மென்மையாகத் துடைத்து எடுக்கவும். குழந்தையின் சருமம் மிகவும் சென்ஸிடிவ் என்பதால், சோப், லிக்விட் சோப், ஃபேஸ்வாஷ் போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம். வெறும் தண்ணீரே போதுமானது. குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் சமயத்தில், குழந்தையிடம் பேசுவது அல்லது பாடுவது போன்றவற்றை செய்யலாம். இதனால் குழந்தையின் கவனம் உங்கள் மீது இருக்கும். நீங்கள் எளிதில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்திட முடியும்.

    பஞ்சு அல்லது வெள்ளை பருத்தி துணியால், குழந்தையின் மூக்கு அருகில் உள்ள கண்ணின் ஓரப் பகுதியிலிருந்து குழந்தையின் கண்களின் வெளிப் பகுதியில் உள்ள ஓரப்பகுதி வரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இரு கண்களுக்கும் இரண்டு பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்துங்கள். ஒரே துணி அல்லது பஞ்சால் சுத்தம் செய்தால், இந்த கண்களில் உள்ள தொற்று அடுத்த கண்ணுக்குப் பரவலாம். எனவே, இருவேறு துணிகள் அல்லது பஞ்சை பயன்படுத்துவது நல்லது.

    சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது. வேண்டாம் என்ற எதிர்ப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் நீங்கள் இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து முடித்து விடலாம். குழந்தைகளும் அழுக மாட்டார்கள். சாதாரண தண்ணீரால் அவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்ய முடியாது.

    அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை தொற்றோ காயமோ கண்களில் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யும் போது சுத்தமான பஞ்சை பயன்படுத்தி, அதை தூக்கி எறிந்து விடுங்கள். குழந்தையின் கண்களுக்கு உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். வெளிப்புறம், உள் ஓரம், வெளி ஓரம் சுத்தம் செய்தாலே போதுமானது. எப்போதும் இளஞ்சூடான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள். வெந்நீர் பயன்படுத்த கூடாது.

    6 + மாத குழந்தைகளுக்கு சமச்சீரான சத்துகள் உள்ள உணவுகளைக் கொடுக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். விட்டமின், தாதுக்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ள உணவுகளை அன்றாடம் கொடுக்க வேண்டும். கண்களும் பார்வை திறனும் அப்போதுதான் நன்றாக இருக்கும். குழந்தைநல மருத்துவரிடம் சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையை காண்பியுங்கள். சில குழந்தைகளுக்கு அதிகமாக கண்ணீர் வழியலாம். அதே முறையாகத் தொடர்ந்து சுத்தம் செய்து வருவது நல்லது.

    Next Story
    ×