search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?
    X

    குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?

    • பிறந்த குழந்தையை அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம்.
    • பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும்.

    பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம். பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள். குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டாலும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்வார்கள்.

    தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளிதானதே.

    Next Story
    ×