search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சுகர் பிரீ மாத்திரைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா?
    X

    சுகர் பிரீ மாத்திரைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா?

    • தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது.
    • மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு மக்கள் சுகர் பிரீ உணவுப் பொருட்களை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த சுகர் பிரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என எல்லாவற்றிற்கும் சுகர் பிரீயைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

    சர்க்கரை சத்து பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. ஆனால் மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    சுகர் பிரீ மாத்திரைகள் அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் இனிப்பு சுவை கொண்டவையாக இருந்தாலும் இவை கொடுக்கும் கலோரிகள் குறைவு. ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், சாக்ரைன், ஸ்டிவ்யோசைடு, லீவுலோஸ் போன்றவை நீரிழிவு நோயாளிகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகள்.

    நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் செயற்கை இனிப்பூட்டியின் அளவு மிகக் குறைவு என்பதால் பக்க விளைவு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்.

    பினைல்கீட்டோன்யூரியா நோய் உடையவர்கள் ஆஸ்பார்டேம் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். சல்பா அலர்ஜி உடையவர்கள் சாக்ரைன் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சுக்ரலோஸ் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியா அழிந்து குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி சுகர் பிரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும் போது மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் பிரீ எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே சுகர் பிரீயை வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை படித்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    Next Story
    ×