search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    யானைக்கால் நோய்க்கான மருத்துவ தீர்வுகள்
    X

    யானைக்கால் நோய்க்கான மருத்துவ தீர்வுகள்

    • 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது.
    • ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும்.

    உயிருள்ள உடலினுள் வாழ்ந்துகொண்டு அந்த உடலினுள்ளேயே உணவையும் தேடி சாப்பிட்டுக் கொண்டு வாழும் ஒருவகை புழுக்களின் பெயர் `ஒட்டுண்ணிப்புழுக்கள்'. யானைக்கால் நோய் இந்த மாதிரி 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது. இந்த நோய் பாதித்தவரின் ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும். பாதிக்கப்பட்டவரை கடிக்கும் கொசு இன்னொரு மனிதரை கடிக்கும் போது நோய் கிருமி பாதித்த ரத்தம் மூலம் அவருக்கு இந்த நோய் பரவுகிறது.

    நிணநீர் நாளங்கள் தான் நமது உடலில் சேரும் கழிவு மற்றும் விஷப்பொருட்களை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. இந்தப் புழு நிணநீர் நாளங்களைப் பாதிக்கச் செய்வதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுப்பொருட்கள் உடலைவிட்டு சரியாக வெளியேற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிணநீர் தேங்கி வீக்கமாக மாறிவிடுகிறது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.

    இந்நோய் கால்கள், கைகள், பிறப்புறுப்புகள், மார்பகங்கள் போன்றவற்றை வீங்க வைக்கும். நிறையபேருக்கு கால்கள் தான் அதிகமாக வீங்கும். உடல் பாகங்கள் அதிகமாக வீங்கிப்போவ தால் அன்றாட வேலைகளைச் செய்ய, நடக்க சிரமமாகி விடும். கையோ காலோ நிணநீர் சேர்ந்து சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வீங்கும். பின்பு மடிப்புகள் விழுந்து நீர் நிரம்பிய தோல் மடிப்புகள் தொங்க ஆரம்பித்துவிடும். 'ஊச்சரே ரியா பேங்க்ரப்டி' என்ற பெயருடைய ஒட்டுண்ணி உருளைப் புழு தான் இந்த நிணநீர் அடைப்பை ஏற்படுத்தி கால்களில் வீக்கத்தை உண்டாக்கும்.

    நீண்ட நாட்கள் உங்கள் கால்களில் வற்றாத வீக்கம் இருந்தால் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து இது சாதாரண வீக்கமா, யானைக்கால் நோய் வீக்கமா அல்லது வேறு ஏதாவது நோயினால் ஏற்பட்ட வீக்கமா என்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஊசி, மருந்து, மாத்திரைகள், எலாஸ்டிக் கட்டு, அறுவை சிகிச்சைகள் போன்றவை இந்த நோய்க்கு தற்காலிக தீர்வைத் தரும்.

    Next Story
    ×