search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    தாவரங்களால் உடலில் தடிப்புகள் உருவாகிறது... ஏன்?
    X

    தாவரங்களால் உடலில் தடிப்புகள் உருவாகிறது... ஏன்?

    • கிளை பகுதிகளின் மேற்புறம் சிறு சிறு துகள்கள் காணப்படும்.
    • நம் தோலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

    சில தாவரங்களின் இலை, தண்டு, கிளைப் பகுதிகளின் மேற்புறம் சிறு சிறு துகள்கள் காணப்படும். இத்துகள்கள் இலைகளின் மேற்புறத்தில் அதிகம் இருக்கும். இவற்றை கூட்டு நுண்ணோக்கி மூலம் பார்த்தால் ஒவ்வொரு துகளின் நுனியிலும் தொப்பி போன்ற ஒரு பகுதியைக் காணலாம்.

    இந்த தொப்பி போன்ற பகுதியின் உள்ளே நம் தோலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அத்தாவரத்தின் பகுதி நம் உடலில் பட்டால் துகளின் நுனியிலுள்ள தொப்பி, நம் தோல் பரப்பில் புதைந்து உடைந்து விடும். அதனால் வேதிப்பொருள் வெளியேறி நம் தோலை அரிக்கும். சில நிமிடங்களில் வேதிவினை காரணமாக அப்பகுதியில் தடிப்பும் உண்டாகிவிடும்.

    சிறுகாஞ்சொறி செடியை கிராமங்களில் செந்தட்டி என அழைக்கிறார்கள். தமிழ் நாட்டில் பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வேலி ஓரங்களில் கம்மாக்கரை, புதர்களில் ஒதுக்குப் புறங்களில் இவை காணப்படும். இவை, பயிர்களுக்கிடையே வளர்க்கூடிய தேவையற்ற களைகளாக கருதப்படுகிறது. இதன் இலைகள் மூன்று விரல்கள் போல் இருக்கும். சிறுகாஞ்சொறி செடி மூன்று வகையாக காணப்படுகிறது.

    * பெரிய இலைகளைக் கொண்டவை பெருக்காஞ்சொறி செடி

    * சிறிய இலைகளைக் கொண்டவை சிறுகாஞ்சொறி செடி.

    * கருப்பு இலைகளைக் கொரண்டவை கருப்பு காஞ்சொறி செடி.

    சிறுகாஞ்சொறி செடி விலங்குகள், மனிதர்களிடமும் தன்னை பாதுகாத்துக் கொள்ள இதன் இலைகளை தொட்டால் அதிக அரிப்பு ஏற்பட்டு சிவந்து புண் ஆகிவிடும் தன்மையை ஏற்படுத்தி தம்மை பாதுகாத்துக் கொள்கிறது. சித்தமருத்துவத்தில், இதன் வேர்களை காய வைத்து பொடி செய்து துளசி சாறோடு சேர்த்து சொரி, சிரங்கு புண்ணை ஆற்றும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

    Next Story
    ×