என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
காவிரி நீர் பிரச்சினை விவசாயிகளின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ பேட்டி
மதுரை:
காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என வைகோ கூறினார்.
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் 17 மற்றும் 18-ந்தேதி களில் தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. மட்டுமல்லாமல் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் கலந்து கொள்கிறது.
இதேபோல பொது மக்களும் இப்போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து மத்திய அரசை நிலை குலைய செய்ய வேண்டும்.
நர்மதா நிதி நீர் பிரச்சினையில் சுலபமாக முடிவெடுத்த மத்திய அரசு காவிரி பிரச்சினையில் மக்களவையில் அனுமதி பெற வேண்டும் என கூறி தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் செய்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்