search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அவினாசி அருகே கோவிலில் கொள்ளை முயற்சி
    X

    அவினாசி அருகே கோவிலில் கொள்ளை முயற்சி

    அவினாசி அருகே கோவிலில் கொள்ளை முயற்சி போலீசார் தீவிர விசாரணை

    அவினாசி:

    அவினாசி அடுத்த தெக்கலூரில் மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் கடந்த ஆண்டு புணரமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றது இந்த நிலையில் கோவில் கமிட்டி பொருளாளர் நந்தகுமார் (43), வழக்கம் போல் இரவு கோவிலை பூட்டிவிட்டு சாமதோட்டம் பகுதியில் உள்ள வீடிற்கு சென்று விட்டார்

    இந்த நிலையில் நள்ளிரவில் கோவில் முன்பக்க கேட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று கோவில் கருவறைக்குள் இருந்த சொத்துக்களை திருட முயற்சி செய்தனர் அப்போது கோவிலுக்குள் ஏதோ சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோவில் முன் திரண்டனர் பொது மக்களை பார்த்ததும் மர்ம நபர்கள் கோவிலில் இருந்து வெளியேறி அவர்கள் கொண்டு வந்த மொபட்டில்தப்பி செல்ல முயன்றனர் பொது மக்கள் வேகமாக துரத்தி சென்றதால் அவர்கள் தடுமாறி சறுக்கி கீழே விழுந்து மொபட்டை விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவு ஆகி விட்டனர்.

    பொது மக்கள் மொபட் மற்றும் அவர்கள் கொண்டு வந்த இரும்பு ராடுகளை அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×