என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
அரக்கோணம் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அல்லியப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 21). இவர் திருத்தணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், வளர்புரம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் (23) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 16–ந் தேதி முனியம்மாள், விநாயகம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, 22–ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடுவதை அறிந்த முனியம்மாள், விநாயகம் இருவரும் நேற்று காலை அரக்கோணம் தாலுகா போலீசில் தாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் எனக்கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்