என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: பிளஸ்-2 மாணவன் பலி
கோவை:
கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி. நகைபட்டறை நடத்தி வருகிறார்.
இவரது மகன் பாலஅய்யப்பன் (வயது 17) அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று இரவு 9.40 மணி அளவில் ரவி, பாலஅய்யப்பன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே பூம்புகார் எதிர்புறம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற லாரி இவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பாலஅய்யப்பன் சாலையில் விழுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் பின்சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது.
இதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் ரவியும் காயமடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை கண் முன்பு மகன் பலியான இந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்