என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்கும்: இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் பேட்டி
Byமாலை மலர்8 Oct 2016 3:35 AM IST (Updated: 8 Oct 2016 3:35 AM IST)
கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் மின்உற்பத்தி தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது என இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை:
இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் சேகர்பாசு, மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. மின்உற்பத்திக்கான கருவி அணுஉலையுடன் இணைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கூடிய விரைவில் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
3-வது மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள், கட்டுமான பணிகள் வருகிற 2017-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை 2017-ம் ஆண்டு மத்தியில் நிறைவடைந்து ஆய்வு பணிகள் தொடங்கும்.
கல்பாக்கத்தில் மின்உற்பத்தியை தொடங்க அதிநவீன கருவிகள் கொண்ட மின்உலை அமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் கல்பாக்கத்தில் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கப்படும். இந்தியாவில் அணுஉலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணுசக்தி கழக உறுப்பினர் சேகர்பாசு, மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. மின்உற்பத்திக்கான கருவி அணுஉலையுடன் இணைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. கூடிய விரைவில் அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
3-வது மற்றும் 4-வது அணுஉலைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள், கட்டுமான பணிகள் வருகிற 2017-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை 2017-ம் ஆண்டு மத்தியில் நிறைவடைந்து ஆய்வு பணிகள் தொடங்கும்.
கல்பாக்கத்தில் மின்உற்பத்தியை தொடங்க அதிநவீன கருவிகள் கொண்ட மின்உலை அமைக்கும் பணி நடக்கிறது. விரைவில் கல்பாக்கத்தில் இருந்து மின்சார உற்பத்தி தொடங்கப்படும். இந்தியாவில் அணுஉலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X