search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மண்ணச்சநல்லூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதி விவசாயி பலி
    X

    மண்ணச்சநல்லூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதி விவசாயி பலி

    மண்ணச்சநல்லூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர், தீராம் பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வீரன் மகன் சின்னதுரை(வயது 42) விவசாயி. மனைவி கலைசெல்வி (30).சம்பவ த்தன்று காலையில் தனது மனைவி கலைசெல்வியுடன்  மோட்டார் சைக்கிளில் மண்ணச்சநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பழையூர் தண்ணீர் பந்தல் அருகே வந்தபோது எதிரே சென்ற மினி வேன் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த கலைச் செல்வி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மண்ணச்ச நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் மினி வேன் டிரைவர் திருப்பைஞ்சீலி தெற்கு பகுதியைச் சேர்ந்த பி. சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×