என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
Byமாலை மலர்25 Jan 2017 4:47 PM IST (Updated: 25 Jan 2017 4:47 PM IST)
குடியரசு தின விழாவில் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.
கோவை:
இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் மேலும் அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் உரிமை உள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கைது செய்து வருகிறார்கள். எனவே இலங்கை கடற்படையினரின் இந்த செயலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
நாளை (26-ந் தேதி) குடியரசு தினவிழாவையொட்டி கச்சத்தீவில் மத்திய- மாநில அரசுகள் தேசிய கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் கலெக்டர் அல்லது இந்திய கடலோர காவல் படையினர் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்.
இல்லையென்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மண்டல இளை ஞரணி செயலாளர் அன்பு மாரி, மகளிரணி தலைவர் நிர்மலா மாதாஜி, நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் மேலும் அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தவும் உரிமை உள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கைது செய்து வருகிறார்கள். எனவே இலங்கை கடற்படையினரின் இந்த செயலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
நாளை (26-ந் தேதி) குடியரசு தினவிழாவையொட்டி கச்சத்தீவில் மத்திய- மாநில அரசுகள் தேசிய கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் கலெக்டர் அல்லது இந்திய கடலோர காவல் படையினர் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்றவேண்டும்.
இல்லையென்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் நாளை கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மண்டல இளை ஞரணி செயலாளர் அன்பு மாரி, மகளிரணி தலைவர் நிர்மலா மாதாஜி, நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X