search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வள்ளலார் தினம்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்
    X

    வள்ளலார் தினம்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல்

    வள்ளலார் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (9-ந் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த பார், தனியார் ஓட்டல்களில் அனுமதிபெற்று நடத்தப்படும் மதுபான கடை உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×