என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கிருஷ்ணகிரி அருகே நில தகராறில் முதியவரை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாசிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(72). இவருக்கும் மல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் (45) என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நிலத்தின் அருகே வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி கமலா(65)ஆகியோர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த மாதம்மாள் அவரது மகன்கள் அன்பு(27) மற்றும் அசோகன்(21) ஆகியோர் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் ஆத்திர மடைந்த மாதம்மாள் தரப்பினர் கமலா மற்றும் வெங்கட்ராமனை சரமாரியாக கையால் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கமலா பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசோகனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்