search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் பயணிகளிடம் தொல்லை
    X

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் பயணிகளிடம் தொல்லை

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி திரிகிறார்கள். அவர்கள் சபலபுத்தி உள்ளவர்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி திரிகிறார்கள். அவர்கள் சபலபுத்தி உள்ளவர்களை அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும் போதையில் வருபவர்களை ஏமாற்றி அழைத்துசென்று சிலர் பணம் பறித்தும் வருகிறார்கள்.

    இதுபோன்ற செயல்களால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ஓரினசேர்க்கையாளர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவர்கள் கழிவறைகள் அருகே சுற்றிதிரிகிறார்கள். அங்கு வரும் பயணிகளை நோட்டமிட்டு ஓரின சேர்க்கைக்கு அழைத்துச்சென்று பணம் பறிக்கிறார்கள்.

    இதனால் பயணிகள் கழிவறைக்கு செல்லவே அச்சப்படு கிறார்கள். இதனை தடுக்க போலீசார் ரோந்துசுற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×