என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆதார் அட்டை போல அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்
Byமாலை மலர்6 April 2017 2:09 AM IST (Updated: 6 April 2017 2:09 AM IST)
ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஏற்கனவே கிரெடிட் கார்டு, ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்களை தயாரித்து மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டனர். சிலர் ஒரு படி மேலே சென்று வாட்ஸ் ஆப் செயலி போன்ற அழைப்பிதல்களை கூட அச்சடித்து மிரள வைத்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய குமார் என்பவர் தன்னுடைய மகனுக்கு காது குத்தும் விழாவுக்கான அழைப்பிதழை வித்தியாசமாக செய்ய முடிவெடுத்தார். அதன்படி, உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான நீர், உணவு ஆகியவை போல இந்தியாவில் தற்போது கட்டாய தேவையாகிவிட்ட ஆதார் அட்டையின் வடிவத்தில் அழைப்பிதழை அச்சடிக்கலாம் என முடிவு செய்து அதை நிறைவேற்றியும் காட்டி விட்டார்.
பார்ப்பதற்க்கு அச்சு அசல் ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அழைப்பிதலில் சிறுவனின் புகைப்படம், பெயர், விழா நடைபெறும் நேரம், இடம் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழா நடைபெறும் நேரம், நாள், மாதம், வருடம் ஆகியவை ஒன்றினைத்து ஆதார் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
ராமநாதபுரத்தில் ஆதார் அட்டை போல காதணி விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஏற்கனவே கிரெடிட் கார்டு, ஏ.டி.எம் கார்டு வடிவிலான திருமண அழைப்பிதழ்களை தயாரித்து மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டனர். சிலர் ஒரு படி மேலே சென்று வாட்ஸ் ஆப் செயலி போன்ற அழைப்பிதல்களை கூட அச்சடித்து மிரள வைத்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய குமார் என்பவர் தன்னுடைய மகனுக்கு காது குத்தும் விழாவுக்கான அழைப்பிதழை வித்தியாசமாக செய்ய முடிவெடுத்தார். அதன்படி, உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான நீர், உணவு ஆகியவை போல இந்தியாவில் தற்போது கட்டாய தேவையாகிவிட்ட ஆதார் அட்டையின் வடிவத்தில் அழைப்பிதழை அச்சடிக்கலாம் என முடிவு செய்து அதை நிறைவேற்றியும் காட்டி விட்டார்.
பார்ப்பதற்க்கு அச்சு அசல் ஆதார் அட்டை போலவே இருக்கும் இந்த அழைப்பிதலில் சிறுவனின் புகைப்படம், பெயர், விழா நடைபெறும் நேரம், இடம் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழா நடைபெறும் நேரம், நாள், மாதம், வருடம் ஆகியவை ஒன்றினைத்து ஆதார் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X