என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை விரட்டி விட்டு 2-ம் திருமணம் செய்த வாலிபர்
Byமாலை மலர்5 Jan 2018 6:32 PM IST (Updated: 5 Jan 2018 6:32 PM IST)
கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை விரட்டிவிட்டு 2-ம் திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தெய்வேந்திரன் (வயது 34). இவருக்கும், பழனியைச் சேர்ந்த நம்புதிரி (33) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தெய்வேந்திரன் சங்கம்பட்டியைச் சேர்ந்த ராணி (27) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இதனை தட்டிக்கேட்ட நம்புதிரியை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து நம்புதிரி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவரது தந்தை பெரியசாமி, தாயார் காசியம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X