என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சோழத்தரம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்8 Jan 2018 10:51 PM IST (Updated: 8 Jan 2018 10:51 PM IST)
சோழத்தரம் அருகே மகனுக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கோதண்ட வளாகம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது52). விவசாயி.
இவரின் 2-வது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பாக அமிர்தலிங்கத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த அமிர்தலிங்கம் வீட்டில் தூக்குப்போட்டு கொண் டார். உயிருக்கு போராடிய அவரை வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு அமிர்தலிங்கத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அமிர்த லிங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X