என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
சோழவந்தானில் வீடு புகுந்து நகை கொள்ளை
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35). இவரது மனைவி பிரின்ஸி. இவர்களது வீடு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளதால் எப்போதும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.
நேற்று சசிக்குமார், தனது மனைவி மற்றும் தாயார் அமராவதியுடன் பாலமேடு அருகே உள்ள மேட்டுப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இரவு வீடு திரும்பிய சசிக்குமார், கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். உடனே சமயநல்லூர் போலீஸ் டி.எஸ்.பி. மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்