என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு- பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரில் மையப்பகுதியில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், அய்யலூர், வடமதுரை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
வழக்கமாக 500 பேர் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தினசரி அரசு ஆஸ்பத்திரிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆனால் இங்கு போதிய அளவு சிகிச்சை பெற வசதி இல்லாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
மொத்தம் 744 படுக்கைகள் உள்ளன. காய்ச்சல் தீவிரமாக உள்ளவர்களுக்கு கொசுவலையுடன் படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிலவற்றில் மெத்தைகள் இல்லாமல் கட்டில் மட்டுமே உள்ளது.
மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இங்கு அந்த வசதி இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.3500 வரை கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி மதுரைக்கு சென்று வருகின்றனர். எனவே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்