search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வடமதுரை அருகே பள்ளி மாணவி மாயம்
    X

    வடமதுரை அருகே பள்ளி மாணவி மாயம்

    வடமதுரை அருகே பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள வன்னியபாறைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் செல்லம்மாள் (வயது16). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று செல்லம்மாள் தனது பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பார்த்தனர். எங்கு தேடியும் காணாததால் அவரது தந்தை பெருமாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் யாரேனும் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும்? என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×