என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 5-ந்தேதி குமரி வருகை
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வட்டார தலைவர்கள் கிளாட்சன், ஜெரால்டு கென்னடி, வைகுண்டதாஸ், நாஞ்சில் செல்வராஜ், அசோக்ராஜ், காலபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வருகிற 5-ந்தேதி குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார். குமரிக்கு வரும் கே.எஸ். அழகிரிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்குவது, குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பொதுமக்களிடமும், மாணவ-மாணவிகளிட மும் ஒரு லட்சம் கையெழுத் துக்கள் பெறுவதற்கான பணியினை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செய்து வருகிறது.
கையெழுத்து இயக்கத்தை குமரி மாவட்டம் வருகை தரும் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்