என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நாகர்கோவிலில் கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்3 Oct 2020 8:23 AM IST (Updated: 3 Oct 2020 8:23 AM IST)
நாகர்கோவிலில் கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி ஆராட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 31). இவருக்கும் மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவிக்கு 19 வயதில் ஒரு தங்கை உண்டு. அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இளம்பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாபு, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் உனது அக்காவை அடித்து விரட்டி விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன இளம்பெண் வீட்டில் யாரிடமும் செல்லாமல் இருந்து வந்தார்.
இதனை அந்த வாலிபர் சாதகமாக்கி கொண்டு, இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள், இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, தன்னை அக்காவின் கணவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார்.
இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி ஆராட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 31). இவருக்கும் மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவிக்கு 19 வயதில் ஒரு தங்கை உண்டு. அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இளம்பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாபு, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் உனது அக்காவை அடித்து விரட்டி விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன இளம்பெண் வீட்டில் யாரிடமும் செல்லாமல் இருந்து வந்தார்.
இதனை அந்த வாலிபர் சாதகமாக்கி கொண்டு, இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள், இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, தன்னை அக்காவின் கணவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார்.
இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொழுந்தியாளை கர்ப்பமாக்கிய பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X