என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆரணி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்3 Oct 2020 2:08 PM IST (Updated: 3 Oct 2020 2:08 PM IST)
ஆரணி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30) இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்துள்ளார். அவரே டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஜோஷிகா, பிரிதிஷா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார். போதிய வருவாய் இல்லாததால் ஐஸ்வர்யா தனது தாய் வீடான ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்திற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த மணிவண்ணன் தனது மனைவி ஐஸ்வர்யாவை சந்தித்து வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு இன்னும் சில நாட்கள் போகட்டும் என்றார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிவண்ணன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது தந்தை ரங்கநாதன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X