search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 908 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 33 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 13 ஆயிரத்து 483 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். 280 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 145 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
    Next Story
    ×