என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்19 Feb 2021 9:09 AM IST (Updated: 19 Feb 2021 9:09 AM IST)
மத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூரில் கிருஷ்ணகிரி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் 2 பேர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் ஓடி விட்டார். மற்றொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்த துரை (வயது 46) என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.
இதே போல மத்தூர்-ஊத்தங்கரை சாலையில் லாட்டரி சீட்டு விற்றதாக கீழ்வீதி பகுதியை சேர்ந்த சபரீசன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள், ரூ.600-ம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் மத்தூர் போலீசார் சோனரஹள்ளி ஏரிபகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மத்தூர் கவுண்டனூர் கூட்டு ரோடு பூங்காவனம் (55), போயர்கொட்டாய் மாது (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X