என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நாகூரில் கார் மீது லாரி மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்30 Jun 2021 5:06 PM IST (Updated: 30 Jun 2021 5:06 PM IST)
நாகூரில் கார் மீது லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
காரைக்கால் மூன்றாவது தெரு எம்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 45).இவர் கார் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை காரைக்காலில் இருந்து தலைஞாயிறுக்கு நாகூர் கிழக்கு கடற்கரை சாலைவழியாக காரில் சுகுமாறன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து காரைக்காலுக்கு இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் சுகுமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகுமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடமலைப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X