என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கிருஷ்ணகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை- பள்ளிகளில் தேங்கிய தண்ணீரால் மாணவர்கள் அவதி
Byமாலை மலர்2 Sept 2021 11:14 AM IST (Updated: 2 Sept 2021 11:14 AM IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது . இந்த திடீர் மழையால் சாலை ஓரங்களில் மழை வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடித்து வந்தது.
நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் கிருஷ்ணகிரியில் பல இடங்களில் மழைதண்ணீர் தேங்கி நின்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை தண்ணீரில் நடந்து சென்றனர்.
பள்ளியில் தேங்கிய மழை தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கிருஷ்ணகிரி- 125. 2
ஊத்தங்கரை- 42.4
போச்சம்பள்ளி- 16.6.
பர்கூர்- 22.2
தேன்கனிக்கோட்டை- 20.4
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 278.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 23.2 மில்லி மீட்டர் பதிவானது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது . இந்த திடீர் மழையால் சாலை ஓரங்களில் மழை வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடித்து வந்தது.
நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் கிருஷ்ணகிரியில் பல இடங்களில் மழைதண்ணீர் தேங்கி நின்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை தண்ணீரில் நடந்து சென்றனர்.
பள்ளியில் தேங்கிய மழை தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கிருஷ்ணகிரி- 125. 2
ஊத்தங்கரை- 42.4
போச்சம்பள்ளி- 16.6.
பர்கூர்- 22.2
தேன்கனிக்கோட்டை- 20.4
ஓசூர்- 10.5
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X