என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
போக்சோ வழக்கில் வாலிபர் கைது
Byமாலை மலர்8 Jan 2022 2:29 PM IST (Updated: 8 Jan 2022 2:29 PM IST)
திண்டுக்கல் அருகே சிறுமியை திருமணம் செய்து கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோகர். அவரது மகன் அஜய் குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏ.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், காவலர் பாக்யராஜ் ஆகியோர் மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை குஜராத், கோவை, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே மாணவியுடன் பதுங்கி இருந்த வாலிபர் அஜய்குமாரை போலீசார் பிடித்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். கடந்த 4 மாதங்களாக போலீசாருக்கு போக்குக் காட்டிய வாலிபரை கைது செய்த சாணார்பட்டி போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மனோகர். அவரது மகன் அஜய் குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஏ.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், காவலர் பாக்யராஜ் ஆகியோர் மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை குஜராத், கோவை, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே மாணவியுடன் பதுங்கி இருந்த வாலிபர் அஜய்குமாரை போலீசார் பிடித்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். கடந்த 4 மாதங்களாக போலீசாருக்கு போக்குக் காட்டிய வாலிபரை கைது செய்த சாணார்பட்டி போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X