என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மதுரை கோட்டத்தில் நாளை ரெயில்கள் இயங்கும்
Byமாலை மலர்8 Jan 2022 5:56 PM IST (Updated: 8 Jan 2022 5:56 PM IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் நாளை ரெயில்கள் இயங்கும் என்றும, முன்பதிவு மையங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் முடிவு எங்களுக்கு பொருந்தாது. எனவே மதுரை கோட்டத்தில் முழு ஊரடங்கு நாளில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அன்றைய நாளில் மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படாது.
இருந்தபோதிலும், அன்றைய நாளுக்கான நடப்பு டிக்கெட் முன்பதிவு மட்டும் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X