என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குடியரசு தின பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
Byமாலை மலர்24 Jan 2022 12:52 PM IST (Updated: 24 Jan 2022 12:52 PM IST)
குடியரசு தினத்தையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
கன்னியாகுமரி:
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், நாங்குநேரி, குழித்துறை ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X