என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கடலூர் அருகே கட்டிடம் இடிந்து 2 மாணவர்கள் பலி
Byமாலை மலர்27 Jan 2022 4:32 PM IST (Updated: 27 Jan 2022 4:32 PM IST)
கடலூர் அருகே இன்று கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே ராமாபுரம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் இருந்தது. அந்த வழியாக எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சுதீஷ்குமார், வீரசேகர், புவனேஷ் ஆகியோர் சென்றனர்.
அப்போது கட்டிடம் திடீரென இடிந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கியதால் அலறிதுடித்தனர்.
சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புபடை வீரர்கள் விரைந்தனர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது.
இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுதீஷ்குமார், வீரசேகர் ஆகியோர் இறந்தனர். புவனேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் அருகே ராமாபுரம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் பாழடைந்த கட்டிடம் இருந்தது. அந்த வழியாக எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சுதீஷ்குமார், வீரசேகர், புவனேஷ் ஆகியோர் சென்றனர்.
அப்போது கட்டிடம் திடீரென இடிந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கியதால் அலறிதுடித்தனர்.
சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புபடை வீரர்கள் விரைந்தனர். பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது.
இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுதீஷ்குமார், வீரசேகர் ஆகியோர் இறந்தனர். புவனேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X