என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கோவையில் அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்20 Feb 2022 2:49 PM IST (Updated: 20 Feb 2022 2:49 PM IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது
கோவை
கோவையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், சிங்காநல்லூர் ஆனந்த நாயக்கர் வீதியில் அ.தி.மு.க. வினர் தங்களது கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போட சொல்லி வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பரிசுப்பொருள் வழங்க டோக்கன் கொடுத்ததாக புகார் எழுந்தது. 58-வது பகுதி தி.மு.க பூத் ஏஜெண்ட் தீபக்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினர் அங்கு சென்று அவர்களை தட்டி கேட்டனர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அ.தி.மு.க.வினர் தீபக்பாபு உள்ளிட்ட தி.மு.க.வினரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தீபக்பாபு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சசிக்குமார், ஆனந்தன், கனகராஜ், செந்தில் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X