என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சேலத்தில் இளம்பெண், முதியவரிடம் நூதன முறையில் ரூ.3.30 லட்சம் மோசடி
Byமாலை மலர்12 April 2022 6:51 PM IST (Updated: 12 April 2022 6:51 PM IST)
சேலத்தில் இளம்பெண், முதியவரிடம் நூதன முறையில் ரூ.3.30 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் பெரமனூர் ராஜாஜி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் (வயது 81). இவரிடம் கடந்த 7-ந் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கிக் கணக்கு ரத்து செய்ய இருப்பதாகவும்,அதனை தடுக்கும் பொருட்டு வங்கி விவரங்களை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அனந்தகிருஷ்ணன் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார், தெரிவித்த அடுத்த சில வினாடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.35 லட்சம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தகிருஷ்ணன் இதுகுறித்து வங்கியில் கேட்டபோது அப்படி யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி புனிதா (வயது 27),இவரது செல்போன் எண்ணிற்கு வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் தகவல் வந்துள்ளது. அதன் மூலம் தொடர்பு கொண்ட புனிதா ரூபாய் 1.97 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
பணத்தை அனுப்பிய சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்ட புனிதா அவற்றை தடை செய்ய முயற்சி மேற்கொண்டார். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புனிதா இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X