search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி, தருமபுரியில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்
    X

    கிருஷ்ணகிரி, தருமபுரியில் கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

    • கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கலேகொண்ட பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒசூர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வானியம்பாடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம்,தொகரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஜிட்டோபனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் சூரியா என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள எல்லன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் காரிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×