search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் உள்பட 3 பேர் மாயம்
    X

    சிறுவன் உள்பட 3 பேர் மாயம்

    • 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோனிஸ் கிருஷ்ணா (வயது 15). பள்ளி மாணவனான இவர் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    இது குறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.

    இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லபட்டியை சேர்ந்த குமரேசன் (34) என்பவர் கடந்த 25-ம் தேதி முதல் காணாமல் போய் விட்டார், இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பெங்களூருவை சேர்ந்த சல்மான்கான் (23) என்ற வாலிபர் ஓசூர் ராம்நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஹிதாஜி பானு கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான்கானை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×