search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கூட்டுறவு சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல்
    X

    கூட்டுறவு சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல்

    • பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நிர்வாக குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வங்கி பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.

    இது குறித்து அப்போதைய கூட்டுறவுத்துறை சரக துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் படி மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    மேலும் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிர்வாக குழு உறுப்பினரான கால்வேஹள்ளி கிராமத்தை சேர்ந்த இந்திராணி (45) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×