search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேர் கைது

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்தல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர் சிப்காட், சூளகிரி, கந்திகுப்பம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.540 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்த வேப்பனப்பள்ளி, பர்கூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக ஓசூர், சூளகிரி, பர்கூர், நாகரசம்பட்டியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×